Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

ஆடுகளம் பற்றி தனுஷ்

களம் மாறுகிறேன்

அப்பாடா... தனுஷிடமிருந்து இந்த வார்த்தையை கேட்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. 'ஆடுகளம்' படத்தில் இதுவரை நடிக்காத புது கேரக்டரில் நடிக்கிறேன் என வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.
'பொல்லாதவன்' வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கைக்கோர்க்கும் படம் 'ஆடுகளம்'. இதில் தனுஷிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். வில்லனாக கவிஞர் ஜெயபாலன் நடிக்கிறார். பூஜை, புனஸ்காரமென்று பந்தா வேலைகளையெல்லாம் செய்யாமல் நேரடியாக படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் வெற்றிமாறன். மதுரையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

கதைப்படி தனுஷ், வீட்டிற்கு அடங்காத தறுதலை. இடையில் ஒரு காதல் அதற்காக வில்லன்களுடன் மோதல். இப்படித்தானே இந்த கதையும் இருக்கும் என்று எகத்தாளம் பேசினால் எரிச்சலாகி விடுவார் தனுஷ். காரணம், முந்தைய தனுஷ் படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையாம் இது. படம் பற்றி மதுரையிலிருந்து தனுஷ் தந்த லைவ் பேட்டி இதுதான்....

"ஆடுகளத்தின் கதைக்களம் மதுரைதான். அதனால் படம் முழுக்கவே மதுரையில் படமாகிறது. மதுரை குடிசை பகுதி இளைஞனாக இதில் நடிக்கிறேன். ரவுடித்தனம் செய்யும் அல்லது சேட்டையான இளைஞன் என சாதாரணமாக இந்த வேடத்தை பற்றி எடை போட்டுவிடமுடியாது. வழக்கமான எனது பாணியிலிருந்து இதில் மாறி நடிக்கிறேன். கல்லூரி மாணவன். அப்பாவிடம் தண்டச்சோறு என திட்டுவாங்கும் மகன் கேரக்டர்களில் நடித்து எனக்கும் போரடித்துவிட்டது பாஸ். அதான் அந்த சாயங்கள் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறேன்.

முதல் முறையாக எனக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறாங்க. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணியிருக்கோம். ஆடுகளம் முடிந்ததும் அண்ணன் இயக்கும் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடிக்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான் மேட்டர்." போதும்!



குறிச்சொற்கள்:
கைதுறப்பு